11 February 2011

பார்த்தது -12


இளைஞன்

கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் வந்துள்ள 75 வது படம். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு 50 வது படம். பா.விஜய்க்கு இரண்டாவது படம் என்று பல மைல் கற்கள் கொண்ட ஒரு படம்.

"பாலைவன ரோஜாக்கள்" காலத்திருக்கு பிறகே நான் கலைஞரின் படங்களை அவ்வளவாக விரும்பி பார்ப்பது இல்லை. அதுவும் கண்ணம்மா என்று ஒரு படத்தினை பார்த்த பிறகு, திரை அரங்கில் மட்டும் அல்லாமல் வீட்டில் கூட தொலை காட்சியுளும் பார்ப்பது இல்லை.

படங்களில் சுவாரசியம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அவருடைய அரசியல் நடவடிக்கைகள் மேல் உருவான வெறுப்பும் படங்கள் பார்க்காமல் விட்டதற்கு ஒரு காரணம்.

ஆனால் என் அப்பா இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று மிக ஆர்வமாய் இருந்தார். கலைஞரின் எல்லா படங்களையும் ரிலீஸ் அன்றே பார்த்து விடுவேன் இதையும் பார்த்து விட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் இறைவனின் எண்ணம் வேறாக இருந்து விட்டது. கடந்த 9 ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார். எனவே அவருக்கு ஆனா 30 நாள் தேவைகள் முடிந்த பிறகு அவர் நினைவாக இந்த படத்தை பார்க்க சென்று இருந்தேன்.

படம் மிகவும் பிரமாண்டமாய் எடுக்க பட்டு இருக்கிறது. திரு மார்டின் அவர்கள் குலுக்கல் சீட்டில் சம்பாதித்தை குலுக்கி விட்டு இருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவமிக்க இயக்கம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அரத பழைய கதை. 1955 நடப்பதாக சொல்லபடுகிறது. ஒரு ரஷ்ய கதையை தழுவி தொழிலாள வர்க்க போராட்டதினை சொன்னதற்கு பதிலாக கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் நடந்த வெண்மணி கதையினை எடுத்து இருக்கலாம்.

அந்த கால மனோகரா போல் விஜயும் கைகள் கட்டப்பட்ட நிலையில் வசனம் பேசுகிறார். இறுதி கட்டத்தில் பொருத்தது போதும் கார்கி பொங்கி எழு என்று குஷ்பு சொல்கிறார். ஆனால் அதில் ஜீவனே இல்லை என்பதுதான் இந்த நவீன மனோகராவின் சோகம்.

இந்த படத்தில் ஒரு விசேசம் வில்லனின் பெயர் "ராஜநாயகம் " பொதுவாக நாகலிங்கம், ஆலகாலன் என்றுதான் வில்லனின் பெயரை கலைஞர் வைப்பார். ஆனால் இதில் ராஜநாயகம் என்று வைத்தது ராஜபக்ஷேவை நினைத்து என்றா தெரியவில்லை. நிஜத்தில்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை atleast படத்திலாவது திட்டி தீர்ப்போம் என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்திருக்கு மிக பெரிய பலம். நமீதா, வடிவேலு, ரம்யா, மீரா ஜாஸ்மின், நாசர், என்று அனைவரும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்கள். அனல் பறக்கும் வசனங்கள் ஆனால் அவை தன்னையே சுட்டி காட்டுவது கலைஞருக்கு தெரியவில்லையா அல்லது அவருள் இருக்கும் எழுத்தாளன் அவரை மீறி வந்து விட்டாரா என்றும் தெரியவில்லை.

மொத்தத்தில் கலைஞரின் இளைஞன், இன்றைய இளைய தலைமுறை போலில்லை.

No comments:

Post a Comment

Followers