03 January 2011

பார்த்தது - 11

மன்மதன் அம்பு

ராஜாமன்னாரில் இருந்து "மன்" மதனகோபாலில் இருந்து "மதன்" அம்புச்சாட்சியில் இருந்து "அம்பு" என பேர் வைக்க யோசித்த கமல் + ரவிக்குமார் கூட்டணி கதையையும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம். மைகேல் மதன காம ராஜன் போல பேரை வைத்து விட்டதால் நகைச்சுவைதான் பிரதானம் என்று தீர்மானித்து விட்டு எல்லோரும் சொகுசு கப்பலில் ஒய்வு எடுக்க போய் விட்டார்கள் போலும்.

நம்பர் 1 கதாநாயகி நிஷாவை (த்ரிஷா) காதலிக்கும் மதன கோபால் (மாதவன்) ஒரு typical சந்தேக பேர்வழி. நிஷாவை துப்பறிய முன்னால் மேஜர் ராஜாமன்னாரை (கமல்) அமர்த்துகிறார் மதன். மன்னாருக்கு நெஞ்சை பிழிய வைக்கும் இரண்டு கிளை கதைகள் ஒன்று அவரது பிரெஞ்சு மனைவி விபத்தில் இறப்பது. (முழுமையாக reverse ல் காட்டப்படும் உத்தி நன்றாக உள்ளது) இரண்டாவது அவரது நண்பர் ரமேஷ் அரவிந்த் வைத்திய செலவுக்கு பணம் தேட வேண்டும்.
(காவிரி பிரச்சனயில் கர்நாடகாவில் ஊர்வலம் போனார் என்ற காரணத்தினால் அவருக்கு மொட்டை அடித்து வாந்தி எடுக்க வைத்து விட்டார்களோ என்று தெரியவில்லை திரையரங்கம் முழுக்க ஒரே வாடை )

ஆரம்பத்தில் வெகு மெதுவாக நடக்கும் துப்பறியும் வேலை மாதவன் பணம் தர மறுத்ததும் சூடு பிடிக்கிறது. நடு தெருவில் நின்று கமல் பொலம்புவதும், எனக்கு பாதை தெரியுது என்று போய் ஒரு முட்டு சந்தில் நிற்பதும் ஆக கலங்க வைக்கிறார்.

அதன்பிறகு அவர் த்ரிஷாவுக்கு ஒரு காதலனை உருவாக்கி மாதவனை முழுநேரமும் தண்ணீரில் மிதக்க வைக்கிறார். டாஸ்மாக்ல் புது வருடத்திற்கு ஏதோ target வைத்து இருந்தாக செய்தி தாள்களில் வந்து இருந்தது அவ்வளவையும் மாதவன் ஒருவருக்கே விற்று achieve செய்து இருக்கலாம். அவ்வளவுக்கு குடித்து தள்ளுகிறார். அவருக்கு பஜ்ஜி போட்டு கொடுக்க ஒரே ஒரு காட்சி வருகிறார் "களவாணி" ஓவியா.

தண்ணீரில் மிதக்கும் மாதவன் கப்பலில் மிதக்கும் த்ரிஷாவின் காதலரை பார்க்க வர அங்கு crazy மோகன் type கிளைமாக்ஸ் அரங்கேற சுபம் இல்லை உச்சகட்ட குழப்பம் . எல்லா கதை மாந்தர்களும் தங்களது குணாதிசியங்களை விட்டு விட்டு அவர்களும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்கள்.

படம் மொத்தத்திலும் திருப்பிய பக்கமெல்லாம் சிக்ஸர், போர் என்று சச்சின் கணக்கா வெளுத்து கட்டுவது சங்கீதாதான். அவருக்கு ஒரு அருமையான மைல்கல் படம். "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் என்று சொந்தனையே நம்பாமல் கட்டை விரல் கதை சொல்வதாகட்டும் , கமலை பார்த்து செம கட்டை என்று ஜொள்ளு விடுவதில் ஆகட்டும் அட்டகாசமாய் பறக்கிறது அவரது கொடி. இன்னும் சொல்ல போனல் performance ல் எல்லோரையும் விட சங்கீதாவே முன்ணணியில் உள்ளார். Hats off சங்கீதா !!!!!

ஊர்வசியை மருத்துவமனையில் விடாமல் குருப்புக்கு ஜோடியாக விட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். உஷா உதுப் ?????? பாவம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அருமை, மனுஷ நந்தனின் ஒளிப்பதிவு மிக அருமை. நொந்து கிடக்கும் படத்திற்கு இவர்களே ஆறுதல். கே.எஸ். ரவிக்குமார் இனியாவது அவர் பேச்சை கேட்கும் கதாநாயகனை வைத்து படம் எடுப்பது அவருக்கு நல்லது.

முனை முறிந்து போன அம்பு

No comments:

Post a Comment

Followers