01 January 2011

பார்த்தது - 10

காந்திபுரம்


எந்திரன் படத்திற்குதான் மிக சிறப்பான மார்க்கெட்டிங் செய்தார்கள் என்று நீங்கள் நம்பி கொண்டு இருந்தால், மன்னிக்கவும் நீங்கள் இன்னும் காந்திபுரம் பார்க்கவில்லை என்று அர்த்தம். முழுவதும் மார்க்கெட்டிங் திறமையாலேயே திரைஅரங்கில் ஒரு முப்பது பேர் இருந்தார்கள். இல்லாவிட்டால் ஒரு டப்பிங் படத்தை போய் அரை மணி நேரம் காத்திருந்து பார்த்து இருப்போமா????

உட்லண்ட்ஸ் சிம்போனி திரை அரங்கில் இந்த படத்தை நானும் என் நண்பர் ரமேஷும் பார்த்தோம். டிக்கெட் ல் கேளிக்கை வரி என்று போட்டு இருந்தது. என்னடா காந்திபுரம் என்பது தமிழ் பேர் இல்லையா ? என்று ரமேஷ் பொங்கி பிரவாகித்து கொண்டு இருந்தார். சென்சார் சான்றிதழ் காட்டும் போதுதான் தெரிந்தது அது ட்ப்பிங் படம் என்று !!!!! ( படம் ஆரம்பித்தவுடன் முழுவதுமாக தெரிந்து விடும் )

எந்த ஒரு விளம்பரத்திலும் பிற நடிகர் நடிகையர் படங்கள் இல்லை, கவி பேரரசு வைரமுத்து என்று பெரிய எழுத்தில் இருக்கும் ஆனால் இசை அமைப்பாளர் பேர் இல்லை. பிற பாடல் ஆசிரியர்கள் பெரும் இருக்காது. கதை - திரைக்கதை - இயக்கம் - இருக்கும் ஆனால் வசனகர்தா பேர் இல்லை. அவை எல்லாம் இருந்தால் விபரம் தெரிந்து விடும் என்று மறைக்கப்பட்டு விட்டது. நாம் யதார்த்தமாக பார்த்தால் அர்ஜுன் நடித்த ஒரு நேரடி படம் போலத்தான் தெரியும்.

வசனம் - டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கும் மருதபரணி. இசை : மரகதமணி பாடல்களை வைரமுத்து தவிர மருதபரணியும் இன்னும் ஒருவரும் எழுதி உள்ளார்கள். மிக முக்கியமாக அர்ஜுன் முழு ஹீரோ கிடையாது. ராம் என்று ஒருவர் அறிமுகம் என்று போடுகிறார்கள். தெலுங்கில் ஒரு வேளை நடுத்தர கதாநாயகனோ என்னமோ தெரியவில்லை.

கதை மும்பையில் இருந்து காந்திபுரதிற்கு வருகிறது பிறகு மீண்டும் மும்பை போய் காந்திபுரத்தில் வந்து முடிகிறது. அதற்குள் நமக்கு முடியாமல் போய் விடுகிறது.

படம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஒருவர் திரைஅரங்க ஊழியரிடம் சென்று " சார் அடுத்த ஷோ இந்த படத்தையே போடுவிங்களா ? ஏன்னா operator பாவம் இதையே எத்தனை தடவை பார்பார் " என்று சொன்னார்.

No comments:

Post a Comment

Followers