என்ன எழுதுவது?
ரொம்ப நாளாகிவிட்டது எழுதி. ஏனோ தெரியவில்லை காரில் பயணிக்கும் போதோ அல்லது வேறு வேலைகள் செய்யும் பொழுதோ இதனை இன்றே எழுத வேண்டும் என்று தோன்றும் ஆனால் இணையத்தில் உட்காரும் பொழுது வேறு எதையாவது பார்த்து விட்டு எழுதுவதை விட்டு விடுகிறேன்.
இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்து இருக்கிறேன். அதுவும் நேற்று திரு. அமிதாப் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை படித்த பிறகு அது மேலும் உறுதி ஆகி உள்ளது. அவருடைய வயதில், அவருடைய வேலை பளுவிலும் அவரால் தினம் எழுத முடியும் என்றால் நாம் ஏன் வாரம் ஒரு முறையாவது எழுத முயற்சி செய்ய கூடாது?
பார்ப்போம் புது வருடம் அன்று எடுக்கப்படும் தீர்மானம் போல் ஆகி விடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் diary எழுதுவது போல் ஆகாமல் இருக்க வேண்டும். ஜனவரி முதல் தேதி பக்கம் முழுவதும் எழுதி தள்ளுவோம். பத்து தேதி நெருங்கும் பொழுது "இன்று ஒன்றும் விசேசம் இல்லை" என்று எழுதுவோம். அப்புறம் பொங்கல் விடுமுறை கழிந்து அந்த diary எங்கே என்று தேட வேண்டிய நிலையில் இருப்போம். அப்புறம் ஒரு பத்து நாள் கழித்து பார்த்தால் அது என் வீட்டுக்காரி மளிகை கணக்கு எழுதவோ அல்லது என் பையன் வீட்டு பாடம் எழுதவோ அல்லது என் தம்பி பொண்ணு படம் வரையவோ எடுத்து போய் இருப்பார்கள்.
அது போல் ஆகாமல் வாரம் ஒரு முறையாவது ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.
வாழ்வின் பெரிய இன்பங்களை தேடி கொண்டு செல்வதால் இது போன்ற மனதிற்கு பிடித்த சிறிய சந்தோசங்களை எப்பொழுதும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன். பெரியதாக அமிதாப்பை போல் தினமும் எழுத போகிறேன் என்று எல்லாம் சொல்லாமல் சிறிய இலக்குகளை நோக்கி துவங்குவோமே !!!!.
சந்தோசதிற்கான ரகசியம் மிக எளிமை ஆனது. நம்மை மகிழ்ச்சியில் ஆற்ற கூடிய விசயங்களை நாம் முதலில் கண்டு உணர வேண்டும். பின்பு அதனை நோக்கி நம்மை, நமது சக்தியை செலுத்தி கொண்டு போக வேண்டும். இதனை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறோம் என்பதுதான் பிரச்சினையே.
இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்து இருக்கிறேன். அதுவும் நேற்று திரு. அமிதாப் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை படித்த பிறகு அது மேலும் உறுதி ஆகி உள்ளது. அவருடைய வயதில், அவருடைய வேலை பளுவிலும் அவரால் தினம் எழுத முடியும் என்றால் நாம் ஏன் வாரம் ஒரு முறையாவது எழுத முயற்சி செய்ய கூடாது?
பார்ப்போம் புது வருடம் அன்று எடுக்கப்படும் தீர்மானம் போல் ஆகி விடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் diary எழுதுவது போல் ஆகாமல் இருக்க வேண்டும். ஜனவரி முதல் தேதி பக்கம் முழுவதும் எழுதி தள்ளுவோம். பத்து தேதி நெருங்கும் பொழுது "இன்று ஒன்றும் விசேசம் இல்லை" என்று எழுதுவோம். அப்புறம் பொங்கல் விடுமுறை கழிந்து அந்த diary எங்கே என்று தேட வேண்டிய நிலையில் இருப்போம். அப்புறம் ஒரு பத்து நாள் கழித்து பார்த்தால் அது என் வீட்டுக்காரி மளிகை கணக்கு எழுதவோ அல்லது என் பையன் வீட்டு பாடம் எழுதவோ அல்லது என் தம்பி பொண்ணு படம் வரையவோ எடுத்து போய் இருப்பார்கள்.
அது போல் ஆகாமல் வாரம் ஒரு முறையாவது ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.

வாழ்வின் பெரிய இன்பங்களை தேடி கொண்டு செல்வதால் இது போன்ற மனதிற்கு பிடித்த சிறிய சந்தோசங்களை எப்பொழுதும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன். பெரியதாக அமிதாப்பை போல் தினமும் எழுத போகிறேன் என்று எல்லாம் சொல்லாமல் சிறிய இலக்குகளை நோக்கி துவங்குவோமே !!!!.
சந்தோசதிற்கான ரகசியம் மிக எளிமை ஆனது. நம்மை மகிழ்ச்சியில் ஆற்ற கூடிய விசயங்களை நாம் முதலில் கண்டு உணர வேண்டும். பின்பு அதனை நோக்கி நம்மை, நமது சக்தியை செலுத்தி கொண்டு போக வேண்டும். இதனை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறோம் என்பதுதான் பிரச்சினையே.
No comments:
Post a Comment