உயர் திரு 420
நடிகர்கள்: சிநேகன் , மேக்னாராஜ், வசீகரன்
இசை: மணிஷர்மா
வசனம்: ராதாகிருஷ்ணன்
கதை, திரைக்கதை,இயக்கம்: பிரேம்நாத்
தயாரிப்பு: R. சந்திரசேகரன் (Rich India Talkies)
பார்த்தது: மீனா (திருச்சி)

சிநேகன் ஒரு ஏமாற்று பேர்வழி. அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். ஒரு முறை மேக்னாவையும் ஏமாற்றி விடுகிறார். தமிழ் சினிமா இலக்கணப்படி அவரையே காதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார். சரி இனிமேல் ஏதோ திருப்பங்கள் வர போகிறது என்று நினைத்து உட்காரும்பொழுது, வசீகரன் - 5 நட்சதிர ஓட்டல் முதலாளி வருகிறார். அவருக்கு கடன் காரர்களுக்கு பதில் சொல்வதே பெரிய வேலையாக இருக்கிறது. இது போக பிரபல நடிகை ஒருவரை காதலிக்கிறார். (தமிழ் தெரியாத தமிழ் நடிகை என்று வேறு ஒரு பில்ட் அப்.
வசீகரனிடம், சிநேகன் வேலைக்கு சேருகிறார். ஆஹா இனிமேல் ஏமாற்று வேலைகள் நடக்க போகிறது என்று பார்த்தால் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். இதற்கு இடையில் தயாரிப்பாளர் சந்திரசேகர் வேறு விஜயகாந்த் பாணியில் ஒரு full coat போட்டு கொண்டு ஒரு நாலைந்து பேருடன் குருக்கும் நெருக்கும் போகிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் குழம்பி போய் விட்டார். ஊரையே ஏமாற்றும் சிநேகன், வசிகரனிடம் மட்டும் கடைசி வரை நல்லவராய் நடந்து கொண்டது ஏன்?
வரி கட்டுவதே முக்கிய வேலை என்றும் அதற்காகவே
சம்பாதிக்கிறார் என்றும் சொல்லப்படும் சந்திரசேகர் ஏன் ஒரு ஏமாற்று பேர்வழியை தன் கூட அழைத்து செல்ல வேண்டும். மேக்னா கடைசியில் என்ன ஆனார்? பல கேள்விகளுக்கு விடை இல்லை.
பா. விஜய் போல் இன்னும் ஒரு கவிஞர், கதாநாயகன் ஆனார் என்பதை தவிர்த்து படத்தில் எதுவும் இல்லை. அருமையான தலைப்பு. அழகா பார்த்திபன் அல்லது ஜீவன் மாதிரி ஆட்களை போட்டு ஒரு விறு விறுப்பான கதையை கொடுத்து இருக்கலாம். நல்ல செலவு செய்து வெளி நாட்டில் எல்லாம் போய் படம் எடுத்தவர்கள் ஒரு நல்ல கதையும் அதற்கு ஒரு நல்ல திரைக்கதையும் அமைத்து இருக்கலாம்.
பாடல்கள் ஒன்றும் ஓகோ என்று சொல்லும் அளவிற்கு இல்லை. உயரம் குறைவான சிநேகனுடன் நடிக்க மேக்னா ரொம்பவே சிரமம் பட்டு இருப்பது பாடல் காட்சிகளில் தெரிகிறது. நல்ல வேளை சிநேகன் டான்ஸ் எல்லாம் ஆட முயற்சி செய்யாமல் ஒரு மாதிரி பாடல் காட்சிகளில் சமாளித்து விட்டார்.
ஒளிப்பதிவு D. சங்கர் என்று இருந்தது. இயக்குனர் மணிவண்ணனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரா என்று தெரியவில்லை. படத்தில் ஒரு freshness யை கடைசி வரை வைத்து இருந்தார்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே விஷயம் ஒளிப்பதிவிக்குஅப்புறமாக சிறப்பாக அமைத்த விஷயம் வசனம். நல்ல crispy ஆன வசனங்கள்.
படம் வெளியான மூன்றாவது நாள், ஞாயிற்று கிழமை வேறு, ஆனாலும் திரை அரங்கில் 42 பேர் கூட இல்லை. அதே சமயம் அதே வளாகத்தில் ஓடும் "காஞ்சானாவிற்கு" ஏகப்பட்ட கூட்டம். அந்த படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு தியேட்ரில் வேறு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து நல்ல பொழுது போக்கு படம் என்றால் மக்கள் திரை அரங்கிற்கு வந்து பார்க்க தயாராக இருக்கிறார்கள் என்பது தான்.
உயர்திரு 420 - நம்மை தண்டித்து விட்டார்கள்.
வசீகரனிடம், சிநேகன் வேலைக்கு சேருகிறார். ஆஹா இனிமேல் ஏமாற்று வேலைகள் நடக்க போகிறது என்று பார்த்தால் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். இதற்கு இடையில் தயாரிப்பாளர் சந்திரசேகர் வேறு விஜயகாந்த் பாணியில் ஒரு full coat போட்டு கொண்டு ஒரு நாலைந்து பேருடன் குருக்கும் நெருக்கும் போகிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் குழம்பி போய் விட்டார். ஊரையே ஏமாற்றும் சிநேகன், வசிகரனிடம் மட்டும் கடைசி வரை நல்லவராய் நடந்து கொண்டது ஏன்?
வரி கட்டுவதே முக்கிய வேலை என்றும் அதற்காகவே

பா. விஜய் போல் இன்னும் ஒரு கவிஞர், கதாநாயகன் ஆனார் என்பதை தவிர்த்து படத்தில் எதுவும் இல்லை. அருமையான தலைப்பு. அழகா பார்த்திபன் அல்லது ஜீவன் மாதிரி ஆட்களை போட்டு ஒரு விறு விறுப்பான கதையை கொடுத்து இருக்கலாம். நல்ல செலவு செய்து வெளி நாட்டில் எல்லாம் போய் படம் எடுத்தவர்கள் ஒரு நல்ல கதையும் அதற்கு ஒரு நல்ல திரைக்கதையும் அமைத்து இருக்கலாம்.
பாடல்கள் ஒன்றும் ஓகோ என்று சொல்லும் அளவிற்கு இல்லை. உயரம் குறைவான சிநேகனுடன் நடிக்க மேக்னா ரொம்பவே சிரமம் பட்டு இருப்பது பாடல் காட்சிகளில் தெரிகிறது. நல்ல வேளை சிநேகன் டான்ஸ் எல்லாம் ஆட முயற்சி செய்யாமல் ஒரு மாதிரி பாடல் காட்சிகளில் சமாளித்து விட்டார்.
ஒளிப்பதிவு D. சங்கர் என்று இருந்தது. இயக்குனர் மணிவண்ணனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரா என்று தெரியவில்லை. படத்தில் ஒரு freshness யை கடைசி வரை வைத்து இருந்தார்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே விஷயம் ஒளிப்பதிவிக்குஅப்புறமாக சிறப்பாக அமைத்த விஷயம் வசனம். நல்ல crispy ஆன வசனங்கள்.
படம் வெளியான மூன்றாவது நாள், ஞாயிற்று கிழமை வேறு, ஆனாலும் திரை அரங்கில் 42 பேர் கூட இல்லை. அதே சமயம் அதே வளாகத்தில் ஓடும் "காஞ்சானாவிற்கு" ஏகப்பட்ட கூட்டம். அந்த படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு தியேட்ரில் வேறு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து நல்ல பொழுது போக்கு படம் என்றால் மக்கள் திரை அரங்கிற்கு வந்து பார்க்க தயாராக இருக்கிறார்கள் என்பது தான்.
உயர்திரு 420 - நம்மை தண்டித்து விட்டார்கள்.