04 March 2011

பார்த்தது - 16

சீடன்

நடிகர்கள்: கிருஷ்ணா (அறிமுகம்), அனன்யா (நாடோடிகள் புகழ் ), சுஹாசினி, விவேக், செம்மீன் ஷீலா, மீரா கிருஷ்ணன், இளவரசு, பொன்வண்ணன் and சிறப்பான தோற்றத்தில் தனுஷ்.

இசை: தீனா (50 வது படம்)

இயக்கம்: சுப்ரமணியம் சிவா.

தயாரிப்பு: மித் புரொடக்ஸன்ஸ் R. மோகன் .

கதை: ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் மஹா என்ற மகாலட்சுமி (அனன்யா). அவர் ஒரு தீவிரமான முருக பக்தை. (ஒரிஜினலில் கிருஷ்ண பக்தை என்று ஞாபகம்). அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு உருவம் வந்து மாலை சூடுகிறது.

இரண்டொரு நாட்களில் அந்த உருவம் அந்த குடும்பத்தின் பேரனாக உள்ளே வருகிறார்(கிருஷ்ணா). அவரும் மகாவை விரும்புகிறார். கிருஷ்ணாவின் தாயார் தங்கம் (சுஹாசினி) வேறு ஒரு பெண்ணை பார்த்து பையனுக்கு ஏற்பாடு செய்கிறார். குழப்பத்தில் தவிக்கும் மகாவிற்கு உதவி செய்ய மடப்பள்ளி சரவணன் (தனுஷ்) என்று அந்த பழனி மலை முருகனே வருகிறார். எந்த ஒரு கிராபிக்ஸ் கலக்களும் இல்லாமல் அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.

தெளிந்த நீரோடை போல் கதை ஆரம்பத்தில் இருந்து போகிறது. ஆனால் கிருஷ்ணாவிற்கு எப்படி? ஏன் ? காதல் வந்தது என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. ஏதோ மஹாவை காதலிக்கவே அவர் பழனி வந்தது போல் உள்ளது. நகைசுவை பகுதியை விவேக் பார்த்து கொள்கிறார். ஒன்றும் பெரிதாக சோபிக்கவில்லை.

பாடல்கள் சுமார் ரகம்.

அனன்யா படத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார். நாடோடிகளில் கிடைத்த பெயரை இதில் தக்க வைத்து உள்ளார். தனுஷ் - ஒவ்வொரு படத்திலையும் அவருடைய performance அருமையாக அமைகிறது. ஆடுகளம் ஒரு தளத்தில் என்றால் மடப்பள்ளி சரவணன் வேறு தளத்தில் நிற்கிறார்.

"நந்தவனம்" அல்லது "நந்தனம்" என்று நினைவு. சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் மலையாளத்தில் நவ்யா நாயர் நடித்து பார்த்த ஞாபகம்.

கலியுக கண்ணன், உருவங்கள் மாறலாம் போன்ற "சமுக கதையில் பக்தி பரவசம்" என்ற பார்முலாவில் வந்துள்ள படம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்பதுதான் மிக பெரிய சந்தேகம். ஒரு இருபது வருடத்திற்கு முன்பு வந்து இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்திருக்க கூடிய படம்.

ஒரு ஆபாச கட்சி இல்லை. எங்கும் ஜடாமுடியுடன் வில்லனின் அடியாட்கள் சுமோ காரில் உருட்டு கட்டையை வீசி செல்லவில்லை. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை என்று பல நல்ல விஷயங்கள் நிறைந்த படம்.

எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனால் அதே போல் நிறைகளும் எதுவும் இல்லை. காதலர்கள் ஒன்று சேரும் போது நமக்கு சந்தோசமோ துக்கமோ எதுவும் ஏற்படவில்லை. காரணம் காட்சிகளை மிக அழுத்தமாக அமைக்காததுதான்.

சீடனுக்கு நல்ல குருநாதர் அமையவில்லை.

No comments:

Post a Comment

Followers