சூடிய பூ சூடற்கவும் கூட்ஸ் வண்டியும்
சாகித்திய அகாடமி பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு. சனவரி மாதம் நடந்த புத்தக சந்தையில் எனது நண்பன் சரவணன் வாங்கி கொடுத்தது. ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் படித்து கொண்டு இருந்த காரணத்தினால் இதனை உடனே படிக்க இயலவில்லை.
சரவணனும் நிதமும் "என்ன படித்தாகி விட்டதா " என்று கேட்டு கொண்டே இருந்தான். நானும் ப்ரன்சிஸ் கிருபா எழுதிய " கன்னி " நாவலை ஒரு வழியாக முடித்து இருந்தேன். அதனால் இதனை படித்து விடுவோம் என்று தாம்பரம் ரயில் நிலையத்தில் "மலைகோட்டை விரைவு வண்டிக்கு " காத்திருந்த போது படிக்க ஆரம்பித்தேன்.
முதல் இரண்டு கதைகள் படித்து இருந்த பொழுது ஒரு சரக்கு ரயில் - கூட்ஸ் வண்டி வந்தது. கதையின் வீச்சினை உள்வாங்கி கொண்டு இருந்த வேளையில் கூட்ஸ் வண்டி வந்து நடை மேடை முழுவதையும் அடைத்து கொண்டு நின்றது.
நான் படித்த இரண்டு கதைகளிலும் ரயில் வண்டி வந்து இருந்தது. அதே தாக்கத்தில் இருக்கும் பொழுது வந்த கூட்ஸ் வண்டி அதன் பங்கிற்கு எனது சிந்தனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரவு 11 மணி அளவில் கூட்ஸ் வண்டி மெதுவாக ரயில் நிலையத்தை கடந்தது. அந்த வண்டியின் கார்டு (GUARD) என்ன செய்வார் என்று ஒரு சந்தேகம். ஒட்டுனர்க்காவது வேலை இருக்கும் ஒரு சலிப்பு தட்டாது ஆனால் கார்ட்க்கு எப்படி இருக்கும். ரயில் நிலையங்களில் கொடி காட்டுவதை தவிர வேறு எதுவும் வேலை இருப்பது போல் தெரியவில்லை.
திடுமென்று ஒரு எண்ணம் நமக்கு இந்த வேலை கிடைத்து இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். நாம் விரும்பிய புத்தகங்களை எல்லாம் மிக சுலபமாக படித்து விடலாமே என்று தோன்றியது. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது அதனால் கிண்டி ரயில் நிலைய வாசலில் ஒருவர் பழைய புத்தகங்கள் விற்பார். அவரிடம் வாங்கி படித்து விட்டு மீண்டும் விற்று விடுவோம்.
இன்றைக்கு லேன்ட் மார்க், ஒடிசி, ஹிகின் பாதம்ஸ் என்றுதான் புத்தகங்கள் வாங்குகிறோம் ஆனால் அமைதியாக படிக்ககூடிய நேரம் அமைவது இல்லை. இப்போ கூட்ஸ் வண்டி கார்டாக போய் இருந்தால் நிறைய படிக்கலாமே என்று ஒரு எண்ணம். மனம் ஒரு குரங்கு என்பது சரியாகதான் இருக்கிறது. இக்கரைக்கு அககரை பச்சை. அவரை கேட்டால் என்ன சொல்வார் என்று தெரியவில்லை.
ஆனால் "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கவில்லை " என்று வைரமுத்து முதல் மரியாதை படத்தில் ஒரு பாடலில் எழுதி இருப்பார். அது போல்தான் ஆகி விட்டது. இன்று ஏக பட்ட புத்தங்கங்கள் வாங்கப்பட்டு இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது. தெரு வழியே போகும் போது புத்தக கடைகளை பார்க்கும் பொழுதும், புத்தகங்கள் பற்றிய விமர்சன கட்டுரைகள் படிக்கும் பொழுதும் ஒரு குற்ற உணர்வா அல்லது கழிவிரக்கமா என்று தெரியவில்லை ஏதோ வந்து தாக்குகிறது.
முன்பு நாங்கள் (நான், சரவணன், கண்ணன் ) சேர்ந்தால் புத்தகங்கள், கவிதைகள், திரைப்படங்கள் என்று பேசி கொண்டு இருப்போம். பெருவாரியான நேரங்களில் படித்த புத்தகங்களின் விமர்சன பகிர்வே பிரதானமாக இருக்கும். ஆனால் இன்று சந்தை நிலவரம், டார்கெட், என்று தான் உள்ளது.
நானும் சரவணனும் மிக கார சாரமாக பேசி கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் எங்களுக்கு சுவையான ஆம்லேட் போட்டு கொடுத்து இலக்கிய பணி ஆற்றுவான். அதே கடல் கரையில் என்றால் மிளகாய் பச்ஜி வாங்கி வருவான். எவ்வளவோ நாட்கள் விடிய விடிய பேசி விட்டு விடிந்த்து கடைக்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வந்து தூங்குவோம்.
நான் என்ன யோசித்து கொண்டு இருக்கிறேன்!!!!!
இப்பொழுதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கிளை கிளையாக பிரிந்து செல்லும் வண்டி பாதை போல ஏதாவது ஒரு சிந்தனை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. குதிரைக்கு கண் பட்டை கட்டி அதன் பார்வையை மறைப்பது போல மனத்திரை கட்டி எண்ண ஓட்டங்களை கட்ட வேண்டும் போல. அதுதான் எப்படி என்று தெரியவில்லை.
சூடிய பூ சூடற்க விரித்த வாக்கில் இருக்க என் மன பிசாசோ மரம் விட்டு மரம் தாவ போய் விட்டது ஒரு கூட்ஸ் வண்டியால்.
நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட்டதால் நாஞ்சில் நாடனை நாளை இரவு பார்த்து கொள்வோம் என்று ஏறி படுக்கையை விரித்து படுத்து விட்டேன். போர்வையை மேலே இழுத்து விட்டுகொள்ளும் போது ஒரு யோசனை, கூட்ஸ் வண்டி கார்டு வேலைக்கு போய் இருந்தால் இப்படி குளிர்பதன (A/C) பெட்டியில் போக முடியாதே என்று.
ஆமாம் கூட்ஸ் வண்டி கார்டு எப்படி தூங்குவார் ?
ஏ மன பிசாசே என்னை தூங்க விடு நீ பாட்டுக்கு மரம் விட்டு மரம் தாவ , நான் விடிய விடிய யோசித்து கொண்டு உட்கார மாதிரி வைத்து விடாதே!!!!!!!!!!!
நல்லிரவு.
சரவணனும் நிதமும் "என்ன படித்தாகி விட்டதா " என்று கேட்டு கொண்டே இருந்தான். நானும் ப்ரன்சிஸ் கிருபா எழுதிய " கன்னி " நாவலை ஒரு வழியாக முடித்து இருந்தேன். அதனால் இதனை படித்து விடுவோம் என்று தாம்பரம் ரயில் நிலையத்தில் "மலைகோட்டை விரைவு வண்டிக்கு " காத்திருந்த போது படிக்க ஆரம்பித்தேன்.
முதல் இரண்டு கதைகள் படித்து இருந்த பொழுது ஒரு சரக்கு ரயில் - கூட்ஸ் வண்டி வந்தது. கதையின் வீச்சினை உள்வாங்கி கொண்டு இருந்த வேளையில் கூட்ஸ் வண்டி வந்து நடை மேடை முழுவதையும் அடைத்து கொண்டு நின்றது.
நான் படித்த இரண்டு கதைகளிலும் ரயில் வண்டி வந்து இருந்தது. அதே தாக்கத்தில் இருக்கும் பொழுது வந்த கூட்ஸ் வண்டி அதன் பங்கிற்கு எனது சிந்தனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது.
இரவு 11 மணி அளவில் கூட்ஸ் வண்டி மெதுவாக ரயில் நிலையத்தை கடந்தது. அந்த வண்டியின் கார்டு (GUARD) என்ன செய்வார் என்று ஒரு சந்தேகம். ஒட்டுனர்க்காவது வேலை இருக்கும் ஒரு சலிப்பு தட்டாது ஆனால் கார்ட்க்கு எப்படி இருக்கும். ரயில் நிலையங்களில் கொடி காட்டுவதை தவிர வேறு எதுவும் வேலை இருப்பது போல் தெரியவில்லை.
திடுமென்று ஒரு எண்ணம் நமக்கு இந்த வேலை கிடைத்து இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். நாம் விரும்பிய புத்தகங்களை எல்லாம் மிக சுலபமாக படித்து விடலாமே என்று தோன்றியது. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது அதனால் கிண்டி ரயில் நிலைய வாசலில் ஒருவர் பழைய புத்தகங்கள் விற்பார். அவரிடம் வாங்கி படித்து விட்டு மீண்டும் விற்று விடுவோம்.
இன்றைக்கு லேன்ட் மார்க், ஒடிசி, ஹிகின் பாதம்ஸ் என்றுதான் புத்தகங்கள் வாங்குகிறோம் ஆனால் அமைதியாக படிக்ககூடிய நேரம் அமைவது இல்லை. இப்போ கூட்ஸ் வண்டி கார்டாக போய் இருந்தால் நிறைய படிக்கலாமே என்று ஒரு எண்ணம். மனம் ஒரு குரங்கு என்பது சரியாகதான் இருக்கிறது. இக்கரைக்கு அககரை பச்சை. அவரை கேட்டால் என்ன சொல்வார் என்று தெரியவில்லை.
ஆனால் "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கவில்லை " என்று வைரமுத்து முதல் மரியாதை படத்தில் ஒரு பாடலில் எழுதி இருப்பார். அது போல்தான் ஆகி விட்டது. இன்று ஏக பட்ட புத்தங்கங்கள் வாங்கப்பட்டு இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது. தெரு வழியே போகும் போது புத்தக கடைகளை பார்க்கும் பொழுதும், புத்தகங்கள் பற்றிய விமர்சன கட்டுரைகள் படிக்கும் பொழுதும் ஒரு குற்ற உணர்வா அல்லது கழிவிரக்கமா என்று தெரியவில்லை ஏதோ வந்து தாக்குகிறது.
முன்பு நாங்கள் (நான், சரவணன், கண்ணன் ) சேர்ந்தால் புத்தகங்கள், கவிதைகள், திரைப்படங்கள் என்று பேசி கொண்டு இருப்போம். பெருவாரியான நேரங்களில் படித்த புத்தகங்களின் விமர்சன பகிர்வே பிரதானமாக இருக்கும். ஆனால் இன்று சந்தை நிலவரம், டார்கெட், என்று தான் உள்ளது.
நானும் சரவணனும் மிக கார சாரமாக பேசி கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் எங்களுக்கு சுவையான ஆம்லேட் போட்டு கொடுத்து இலக்கிய பணி ஆற்றுவான். அதே கடல் கரையில் என்றால் மிளகாய் பச்ஜி வாங்கி வருவான். எவ்வளவோ நாட்கள் விடிய விடிய பேசி விட்டு விடிந்த்து கடைக்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வந்து தூங்குவோம்.
நான் என்ன யோசித்து கொண்டு இருக்கிறேன்!!!!!
இப்பொழுதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கிளை கிளையாக பிரிந்து செல்லும் வண்டி பாதை போல ஏதாவது ஒரு சிந்தனை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. குதிரைக்கு கண் பட்டை கட்டி அதன் பார்வையை மறைப்பது போல மனத்திரை கட்டி எண்ண ஓட்டங்களை கட்ட வேண்டும் போல. அதுதான் எப்படி என்று தெரியவில்லை.
சூடிய பூ சூடற்க விரித்த வாக்கில் இருக்க என் மன பிசாசோ மரம் விட்டு மரம் தாவ போய் விட்டது ஒரு கூட்ஸ் வண்டியால்.
நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட்டதால் நாஞ்சில் நாடனை நாளை இரவு பார்த்து கொள்வோம் என்று ஏறி படுக்கையை விரித்து படுத்து விட்டேன். போர்வையை மேலே இழுத்து விட்டுகொள்ளும் போது ஒரு யோசனை, கூட்ஸ் வண்டி கார்டு வேலைக்கு போய் இருந்தால் இப்படி குளிர்பதன (A/C) பெட்டியில் போக முடியாதே என்று.
ஆமாம் கூட்ஸ் வண்டி கார்டு எப்படி தூங்குவார் ?
ஏ மன பிசாசே என்னை தூங்க விடு நீ பாட்டுக்கு மரம் விட்டு மரம் தாவ , நான் விடிய விடிய யோசித்து கொண்டு உட்கார மாதிரி வைத்து விடாதே!!!!!!!!!!!
நல்லிரவு.