21 July 2010

பார்த்தது - தமிழ் படம் -4



ரொம்ப நாளுக்கு அப்புறமாக ஒரு நல்ல படம் பார்த்தேன் என்று எழுதுவது கூட தவறோ என்று தோன்றும் அளவிற்கு தமிழில் மிக அருமையான படங்கள் வருகின்றன.

மதராசா பட்டிணமும் அதில் ஒன்று.

கோவை செந்தில் திரை அரங்கில் ஞாயிறு அன்று இரவு காட்சி பார்த்தேன். ஆர்யா, எமி ஜாக்சன், VMC ஹனிபா, நாசர், பாலா சிங், MS பாஸ்கர், அவருடைய மகனாக வரும் ஒரு தாடிக்காரர், பல படங்களில் சிறிய வேடத்தில் வந்து போன ஆனால் இதில் கபிராக வாழ்ந்து இருக்கும் நபர் என்று யாரை பாராட்டுவது யாரை விடுவது என்றுதான் தெரியவில்லை.

திரைக்கு பின்னால் செல்வகுமார், நிரவ் ஷா, நா .முத்துக்குமார் , ஆண்டனி , GV பிரகாஷ் குமார் என்று ஒரு கூட்டமே இயக்குனர் விஜய்க்கு பக்க பலமாக உழைத்து இருகின்றார்கள்.

இந்த படத்தில் இவருடைய பணி சரி இல்லை என்று சொல்ல முடியாத அளவிருக்கு அனைவரும் தூள் பரத்தியிருகின்ரார்கள்.

துரை அம்மாவுக்கும் பரிதிக்கும் இடையில் காதல் முகிழ்க்கும் போது ஒரு ஹம்மிங் "தான தான" என்று ஒன்று GV கொடுத்து இருக்கின்றார் பாருங்கள் , ஆஹா பேஷ் பேஷ் என்று சொல்ல தக்க அளவில் தான் இருக்கும். இசைஞானி ஆகும் முன்பாக திரு. இளையராஜா இது மாதிரி மிக அருமையான BG போட்டு இருப்பார். நா. முத்துகுமாரின் வரிகளும் ஒவ்வொரு படத்திலும் மனதை ஈர்க்கும் படி அமைந்து விடுகின்றது.

நிகழ் காலத்துக்கும் , கடந்த காலத்துக்கும் போய் வரும் உத்தியை விஜய் மிக அருமையாக கையாண்டு இருக்கின்றார்.

சண்டை காட்சிகள் மிகவும் யதார்த்தமாய் அமைந்து உள்ளது. கயிறு கட்டி ஹீரோ பறந்து பறந்து சண்டை போடவில்லை ஆனால் ஆர்யாவின் கண்களும் நரம்புகளும் ஆக்ரோஷத்தை காட்டுகின்றன.

Titanic போல உள்ளதாக என்னுடன் வந்த நண்பர்கள் சொன்னார்கள். ஒரு வயதான மூதாட்டியின் பார்வையில் ஒரு காதல் கதை என்றாலே உடனே அதை Titanic உடன் ஒப்பிடுவது தவறு என்பது என் கருத்து.

இந்த படத்தில் குறை என்று சொல்ல வேண்டும் என்றால் ஒரு கனவு பாடல் காதலர்களின் பிரிவை நினைத்து வருவது போல் உள்ளது, அதனை தவிர்த்து இருக்கலாம்.

கபீர், பரிதிக்காக உயிர் தியாகம் செய்ய துணிந்தவர், எப்படி தன் பேத்தியிடம் பரிதியை பற்றியோ அல்லது துரை அம்மாவை பற்றியோ பேசாமல் இருந்திற்பார். அதுவும் பரிதி சென்னையில் மிக பிரபலமாக ஒரு சேவை நிலையம் நடத்தி வரும் போது?

சின்ன சின்ன குறைகள் இல்லாவிட்டாலும் சரி இல்லையே.

மொத்தத்தில் ஒரு நிறைவான படம். இன்னும் சொல்ல போனால் துரை அம்மா இறந்தவுடன் வெறும் வசணங்களை மட்டும் வைத்து விட்டு இருட்டாக்கி இருப்பது ஒரு அருமையான directorial உத்தி. மூதாட்டியின் பார்வையில் விரியும் படம் அவர் இறந்த பின் நமக்கு தெரிய முடியாது அல்லவா.

Hats off டு விஜய் and டீம்

No comments:

Post a Comment

Followers