
வேட்டைக்காரன் திரைப் படத்தினை கடந்த ஞாயிறு அன்று பார்க்க குடும்பத்துடன் சென்று இருந்தோம்.
எனது தம்பி பெண் மேகா (7 வயது ) தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பர தொகுப்பில் வரும் "வேற வேற " பஞ்ச் வசனத்தை சொல்லிக்கொண்டு வந்தாள். திரு. ரஜினிக்கு பிறகு குழந்தைகள் வரைக்கும் ஈர்க்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது.
ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ன செய்ய வேண்டுமோ, அத்தனை சங்கதிகளையும் விஜய் கடமை தவறாமல் செய்து முடித்து விட்டார். திரைப்படம் முடியும் பொழுது ஒரு மாதிரி ஆயாசமாக இருந்தது
எல்லா படத்துலேயும் தாதாக்களை அடித்து துவைப்பது விஜய்க்கு bore அடிக்காதா என்று தெரியவில்லை, ஆனால் நமக்கு தாங்க முடியவில்லை.
காதலுக்கு மரியாதை, பிரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் என்று வெவ்வேறு பாணியில் படங்கள் கொடுத்தவரை இமேஜ் வளையத்துக்குள் மாட்ட வைத்து வீண் அடிக்கின்றார்களே என்று எண்ண தோன்றுகிறது.
ஹீரோவிற்காக "கதை" பண்ணுவதை நிறுத்திவிட்டு "கதையில்" ஹீரோவை கொண்டு வந்தால் 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் நமக்கும் ஒரு திருப்தி சந்தோசம் இருக்கும்.
திரைப்படம் பார்த்து விட்டு திரும்பி வரும் போது, என் தகப்பனார் (வயது 68 ) சொன்னார் , " வீட்டுல போய் MGR நடிச்ச வேட்டைக்காரன் DVD யை போட்டு பார்க்கணும்"