பார்த்தது - பட்டாஸ்
நடிகர்கள்: தனுஷ், சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, மெஹ்ரின்
இசை: விவேக் மெர்வின்
இயக்கம்: துரை செந்தில்குமார்
கதை: அப்பாவை கொன்ற வில்லனை மகன் பழி வாங்கும் அரத பழசான கதை. அதில் "அடிமுறை " என்ற புது விஷயத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
மெஹ்ரின்: தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகி. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனிடம் அடிவாங்கி விட்டு தனுஷுக்கு முத்தம் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு போவதுடன் அவரது பங்களிப்பு முடிந்து விடுகிறது.
பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் காமெடியில் ஒரு ரவுண்டு வருவார். திருட யோசிக்கும் தனுஷ் இடம் " PASSION இல்லனா ப்ரோ பேப்பர் போட்டுட்டு போங்க " என்று சொல்லும் பொழுது திரை அரங்கமே அதிருகிறது. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு.
நாசர்: வேலப்பன் ஆசானாக வழக்கம் போல். இந்த யானைக்கு ஏன் இப்படி சோள பொரி கொடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
நவீன் சந்திரா: பிரம்மன் படத்தில் சாக்கலேட் பையன் போல் வந்தவர் இதில் ரண கள வில்லன். சிறப்பான வில்லன்.
தனுஷ்: தொழிலை நேசிக்கும் ஒரு மனிதன் தன்னை எப்படி வடிவமைத்து கொள்வான் என்பதற்கு இவர் தான் சிறந்த எடுத்து காட்டு. திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் ஆரம்பித்து அசுரன் போன்று ஒரு வளர்ச்சியை அடைந்து உள்ளார்.
அவர் தற்போது தேர்வு செய்யும் படங்களில் மண் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த படத்திலும் திரவிய பெருமாள் ஆக வாழ்ந்து இருக்கிறார். மரு வைத்தால் அப்பா எடுத்தால் மகன் என்று இல்லாமல் உடல் மொழி, பேச்சு என்று எல்லாவற்றிலும் நல்ல வித்தியாசம்.
சினேகா: இளம் பெண்ணாய் துள்ளல். நல்ல COME BACK படம்.
சண்டை என்று வந்து விட்டால் யாராக இருந்தாலும் விட்டு கொடுக்காத தன்மை. கணவன் இறப்பை பார்க்கும் பொழுது பரிதவிப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கும் பொழுது கண்களில் ஏக்கம். கொலை செய்ய நினைக்கும் போலீசை அடித்து துவைக்கும் அதிரடி என்று வெளுத்து வாங்குகிறார்.
ஏற்கனவே கொடி படத்தில் திரிஷாவுக்கு நல்ல வேடம் கொடுத்த துரை செந்தில்குமார் இதில் சினேகாவை சிறப்பாக பயன் படுத்தி இருக்கிறார். அவருக்கும் தனுசுக்கும் நல்ல புரிதல் வந்து இருக்கிறது. இன்னும் சிறப்பான படங்கள் தரட்டும்.
பெரிதாக ஈர்க்க வில்லை என்றாலும் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. அடிமுறை என்ற பழமையான தற்காப்பு கலையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரியை போட்டு விட்டு, வில்லனை பழிவாங்குவதை இன்னும் வித்தியாசமாக செய்து இருக்கலாம்.
மிக பெரிய மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளருடன் நடை பெரும் கிளைமாக்ஸ் சண்டை வெறித்தனமாக அமைந்து இருக்க வேண்டாமா? ரொம்ப ரொம்ப சுமார்.
பொங்கலில் வெடித்த பட்டாஸ் கொஞ்சம் மார்கழி பனியில் ஆங்காங்கு நமத்து போய் இருக்கிறது. கொஞ்சம் கவனம் எடுத்து இருந்தால் பட்டாஸ், தர்பாரை தகர்த்து இருக்கும்.

இசை: விவேக் மெர்வின்
இயக்கம்: துரை செந்தில்குமார்
கதை: அப்பாவை கொன்ற வில்லனை மகன் பழி வாங்கும் அரத பழசான கதை. அதில் "அடிமுறை " என்ற புது விஷயத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
மெஹ்ரின்: தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகி. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனிடம் அடிவாங்கி விட்டு தனுஷுக்கு முத்தம் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு போவதுடன் அவரது பங்களிப்பு முடிந்து விடுகிறது.
பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் காமெடியில் ஒரு ரவுண்டு வருவார். திருட யோசிக்கும் தனுஷ் இடம் " PASSION இல்லனா ப்ரோ பேப்பர் போட்டுட்டு போங்க " என்று சொல்லும் பொழுது திரை அரங்கமே அதிருகிறது. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு.
நாசர்: வேலப்பன் ஆசானாக வழக்கம் போல். இந்த யானைக்கு ஏன் இப்படி சோள பொரி கொடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
நவீன் சந்திரா: பிரம்மன் படத்தில் சாக்கலேட் பையன் போல் வந்தவர் இதில் ரண கள வில்லன். சிறப்பான வில்லன்.
தனுஷ்: தொழிலை நேசிக்கும் ஒரு மனிதன் தன்னை எப்படி வடிவமைத்து கொள்வான் என்பதற்கு இவர் தான் சிறந்த எடுத்து காட்டு. திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் ஆரம்பித்து அசுரன் போன்று ஒரு வளர்ச்சியை அடைந்து உள்ளார்.
அவர் தற்போது தேர்வு செய்யும் படங்களில் மண் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த படத்திலும் திரவிய பெருமாள் ஆக வாழ்ந்து இருக்கிறார். மரு வைத்தால் அப்பா எடுத்தால் மகன் என்று இல்லாமல் உடல் மொழி, பேச்சு என்று எல்லாவற்றிலும் நல்ல வித்தியாசம்.

சண்டை என்று வந்து விட்டால் யாராக இருந்தாலும் விட்டு கொடுக்காத தன்மை. கணவன் இறப்பை பார்க்கும் பொழுது பரிதவிப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கும் பொழுது கண்களில் ஏக்கம். கொலை செய்ய நினைக்கும் போலீசை அடித்து துவைக்கும் அதிரடி என்று வெளுத்து வாங்குகிறார்.
ஏற்கனவே கொடி படத்தில் திரிஷாவுக்கு நல்ல வேடம் கொடுத்த துரை செந்தில்குமார் இதில் சினேகாவை சிறப்பாக பயன் படுத்தி இருக்கிறார். அவருக்கும் தனுசுக்கும் நல்ல புரிதல் வந்து இருக்கிறது. இன்னும் சிறப்பான படங்கள் தரட்டும்.
பெரிதாக ஈர்க்க வில்லை என்றாலும் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. அடிமுறை என்ற பழமையான தற்காப்பு கலையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரியை போட்டு விட்டு, வில்லனை பழிவாங்குவதை இன்னும் வித்தியாசமாக செய்து இருக்கலாம்.
மிக பெரிய மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளருடன் நடை பெரும் கிளைமாக்ஸ் சண்டை வெறித்தனமாக அமைந்து இருக்க வேண்டாமா? ரொம்ப ரொம்ப சுமார்.
பொங்கலில் வெடித்த பட்டாஸ் கொஞ்சம் மார்கழி பனியில் ஆங்காங்கு நமத்து போய் இருக்கிறது. கொஞ்சம் கவனம் எடுத்து இருந்தால் பட்டாஸ், தர்பாரை தகர்த்து இருக்கும்.