06 February 2013

கடல்

கடல் 


நடிகர்கள்: அர்ஜுன், அரவிந்த்சாமி, கெளதம் கார்த்திக், துளசி, பொன்வண்ணன்
கதை: ஜெயமோகன் ??????
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
இசை: A .R . ரகுமான்
இயக்கம்: மணிரத்னம்

பார்த்தது: செந்தில் - கோவை 


ராவணன் எடுத்து நம்மை துன்ப  கடலில் தள்ளியதால் அடுத்து கடல் என்று மணிரத்னம்  படம் எடுத்து விட்டார் போலும். கதையின் சம்பவங்கள் மிகவும் மெதுவாக நகர்கிறது என்ற ஒரு விசயத்தை எடுத்து விட்டால் மணியின் ராவணனுக்கு இது தேவலாம். ஆனால் பழைய மணிரத்னம் படங்களை இன்று பார்க்கும் பொழுது கூட மனதில் ஒரு மெல்லிய நெகிழ்ச்சி வரும் அது கடலில் இல்லை. சமீப கால மணியின் படங்கள் எதிலும் இல்லை.

ராஜீவ் மேனனின் கேமரா நாம் ஒரு மீனவர் கிராமத்தில் வாழ்வது போன்றே உணர்வை தருகிறது. A .R . ரகுமான் வழக்கம் போல் மணிரத்னதிற்காக வெகு சிறப்பாக பாடல்களை அமைத்து கொடுத்து உள்ளார். ஆனால் மிக அருமையான "நெஞ்சுக்குள்ளே " பாடல் படத்தில் எடுபடவே இல்லை.

சிங்கம் புலி யாரையும் சிரிக்க வைக்கவும் இல்லை அவர் சிரிக்கவும் இல்லை.
அர்ஜுன் பல தீவிரவாதிகளை, கடத்தல்காரர்களை பிடித்தவர் இதில் இத்தனை படத்தில் செய்த நல்லது எல்லாவற்றுக்கும் சேர்த்து கெட்டது மட்டுமே செய்கிறார். ஆனால் ஏனோ மனதில் ஒட்டவே இல்லை.

அரவிந்த்சாமி - The Charm of the yester year - அப்படியே இருக்கிறார். தமிழ் திரைஉலகம் இவரை சரியாக பயன் படுத்தி கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

கெளதம் - முத்துராமன் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை. ஒரு வகையில் இந்த படம் SUPER HIT ஆகாமல் போனது கூட நல்லது தான். கார்த்திக்கின் முதல் படம் வெள்ளி விழா கொண்டாட போய்தான் அவரை பிறகு பிடிக்கவே முடியவில்லை. மிக இயல்பாக நடித்து இருக்கிறார். துளசியும் அந்த கதாபாத்திரம் உணர்ந்து செய்து இருக்கிறார். கொஞ்சம் ஏமாந்தால் தமிழ் சினிமாவின் "லூசு பெண் " ஆகி இருக்க கூடியது.

 தவறு செய்து  விட்டேன் என்று கெளதம் சொல்லும் பொழுது மிக இயல்பாக வந்து கையை தடவி விட்டுட்டு இனிமே செய்யாதே என்று சொல்லி விட்டு போகும் கட்டத்தில் மிக அருமையாக செய்து இருக்கிறார். படம் முழுவதும் வெள்ளை உடையில் வந்து தாமசை (கெளதம்) காக்க வந்த தேவதை என்று காட்டுகிறார்.

எல்லாம் இருந்தாலும் ஒரு அழுத்தம் இல்லை.

க dull

Followers