23 May 2010

தமிழ் படம் -3



கொல கொலையா முந்திரிக்கா

சுமார் 16 பேர் மட்டும் இன்று காலை காட்சி வெங்கடேசா திரை அரங்கில் பார்த்தோம்.

கார்த்தி, ஷிகா, ஜெயராம், எம்.எஸ். பாஸ்கர் , ஆனந்தாராஜ், ராதா ரவி பத்தும் பத்தாததுக்கு சுப்ரிம் ஸ்டார் சரத் குமார் வேற நடித்து இருகின்றார்.

ஜெய் சங்கர் நடித்த நவாப் நாற்காலி மாதிரி இதிலும் ஒரு நாற்காலி, அதற்குள் வைரம் மறைந்து இருகின்றது என்று கதை காமெடி ஆக போகின்றது.

கிரேசி மோகன் கதை வசனம் எழுதியும் பெரிய அளவில்
காமெடி எடுபடவில்லை.

மிக சிறந்த நடிப்பு திறமை இருந்தும் கார்த்திக் இன்னும் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.
ஷிகா அழகு பதுமை. ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உண்டு.

பாடல்கள் - படத்திருக்கு எக்ஸ்ட்ரா தலை வலி.

16 பேருக்கு fan மற்றும் ac போட்ட வெங்கடேசா திரை அரங்குக்கு நன்றி. இதை தவிர இந்த படத்தை பற்றி சொல்ல எதுவும் இல்லை.

Followers