29 March 2010

படித்தது 1

மாணவர் தலைவர் அப்புசாமி



சிறு வயதில் குமுதம் புத்தகத்தில் தொடராக வரும்போது மிக ஆர்வமாக படித்த சில தொடர்களில் மிக முக்கியமான இடம் அப்புசாமி - சீதாபாட்டி தொடருக்கு உண்டு.

மனசு விட்டு சிரிக்க வைப்பதில் இந்த தம்பதிகளுக்கு ஈடு இணை யாரும் இருக்க முடியாது.

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது கதை புத்தகங்கள் படிக்க அனுமதி கிடைக்காது. ஆனால் குமுதத்தில் வந்த "அப்புசாமி சீதா பாட்டி" படிக்க எப்பொழுதும் தடை இருக்காது.

நேற்று எனது மகன் மது, " மாணவர் தலைவர் அப்புசாமி " என்ற புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தார். நூலகர் நல்ல புத்தகம் என்று என்  பையனுக்கு சிபாரிசு செய்து அனுப்பி இருந்தார்.

எனக்கு எனது சிறு வயது நினைவு. உடனே எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இந்த கதையில் ரசகுண்டுவுக்கும், பீமா ராவ்வுக்கும் இடம் இல்லாமல் போனது சிறிது வருத்தம் தான்.

ஒரு திவானை சந்தித்து காணமல் போன ராஜகுமாரனை தேடி போகும் அப்புசாமி பல சாகசங்கள் செய்து "ராஜமித்ரர்" ஆகிறார். பின் அவரை தேடி மாணவர் தலைவர் பதவியும் வருகின்றது. எல்லாம் சுபமாக போகும் வேலையில் சீதா பாட்டி நுழைந்து எப்போதும் போல் எல்லா புகழையும் அடைந்து விடுகின்றார். அப்புசாமி வழக்கம் போல் புது சபதம் எடுத்து கொண்டு போகின்றார்.

இதில் ஒரு விஷயம் யோசித்தால் எல்லா வீடுகளிலும் இது தான் நடக்கின்றது. நாம் கஷ்டப்பட்டு செய்வது எல்லாம் கடைசியில் "அவருக்கு என்ன தெரியும் எல்லாம் நான் தான் சொல்ல வேண்டி உள்ளது " என்று சொல்ல படுகின்றது. நாமும் பேசாமல் இருந்து விடுகின்றோம். இதைத்தான் திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதி இருகின்றார் போலும்.

எந்த வீட்டிலும் கணவர் திறமைசாலி என்றோ அல்லது அவர் எடுக்கும் முடிவுகள் மிக  இருக்கும் என்றோ எந்த மனைவியும் ஒப்புக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த இடத்தில ஒரு நகைச்சுவை துணுக்கு ஒன்று படித்தது நினைவுக்கு வருகின்றது. இரண்டு நண்பர்கள் பேசி கொண்டு உள்ளார்கள். அதில் முதலாமவர் சொல்கிறார்.

" நான் வீட்டில் ரொம்ப strict, எல்லா முக்கிய விசயங்களிலும் நான் தான் முடிவு எடுப்பேன். சில்லறை விசயங்களில் எனது மனைவி முடிவு எடுப்பார் என்று சொல்கிறார். இரண்டாமவரும் என்னை போல உள்ளவர் போலிருக்கிறது. ரொம்ப ஆதங்கத்துடன் அப்படியா சார் நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர், அப்படி என்ன விஷயங்கள் என்று நீங்கள் பிரித்து கொண்டு உள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, முதலாமவர் சொன்னார், " சார் சீனாவின் எல்லை மீறலை எப்படி சமாளிக்கிறது? மோடியும் ஒபாமாவும் என்ன பேசினால் நல்லா இருக்கும் மாதிரி உலக முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களில் நான் எடுப்பது இறுதி முடிவாக இருக்கும். சொந்தகாரங்க வீட்டுக்கு போறது, வீட்டு வரவு செலவு கணக்கு போன்ற சில்லறை விசயங்களில் என் மனைவி முடிவு எடுக்கட்டும் என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவர். பல வடிவேலுகள் நம்மிடைய அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே இருப்பார்கள் போல.

நம் எல்லோரிடமும் ஒரு அப்புசாமி இருகின்றார் என்றே எண்ண தோன்றுகிறது. நாம் முடித்த அலுவலக வேலைக்கு சொந்தம் கொண்டாடும் மேலாளரும் ஒரு வகையில் சீதா பாட்டி தான். அங்கத வகையில் வாழ்கையை நோக்கும் ஒரு கதை தான் அப்புசாமி கதைகள்.

ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்து கொண்டே படித்தேன்.


Followers